Saturday 28 July 2018

அமிழ்தம் மின்னிதழ் மலர் - 4
‘நட்பு என்பது வரம்!’
இதை எங்கள் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

நம் உள்ளுக்குள் இருக்கும் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கவும், அந்த வடிவம் முழுமை பெறவும் இந்த நட்புகளின் பங்களிப்புகள் எங்கள் வாழ்க்கையில் மறக்கவியலாத அழகிய உறவாக அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு நன்றி!
 அமிழ்தம் மின்னிதழ் உருவானதும் எங்களது நட்பால். அதன்மூலமாக உருவான கலைச் சாரல் படைப்பாளர் – வாசகர்களுக்கு ஒரு பாலம் அமைக்க முயன்று கொண்டிருப்பதும் ஒரு தோழமையால்.
மின்னிதழுக்காக ஒரு தளம் அமைத்திருந்த போதும், சில அலுவல்களாலும், நெருக்கடிகளாலும் எங்களால் அதை வடிவமைக்க போதிய நேரம் ஒதுக்க முடியவில்லை.
ஆனால், தனது அலுவல்கள் அனைத்தையும் எங்களுக்காக ஒதுக்கிவைத்துவிட்டு பார்வைக்கு அழகாக, அனைவரும் சுலபமாகக் கையாளக் கூடிய வகையில் அழகுற அமைத்துக் கொடுத்த திருமிகு காம்கேர். கே. புவனேஸ்வரி மேடமிற்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் எங்கள் அன்பை சொல்லிவிட முடியாது.
ஆரம்பம் முதலே எங்களது ஒவ்வொரு செயலுக்கும் ஊக்கமும், ஆக்கமுமாக இயங்கி வரும் திருமிகு காம்கேர். கே. புவனேஸ்வரி மேடமிற்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம். நன்றி மேடம்!
இதோ, புதியதொரு தளத்தில் தாமதமாக வந்தாலும், உங்கள் மனத்தைக் கவர வந்துவிட்டது நமது அமிழ்தம் 4ம் மலர். உங்கள் கருத்துப் பகிர்வுக்காகவும், விமர்சனங்களுக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறோம் நாங்கள்.
நன்றி!
அமிழ்தம் மின்னிதழ் மலர்-4

For slow internet connection, please click the below link


To read in Calameo:-