Tuesday 14 April 2020


அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! அமிழ்தம் மின்னிதழ் மற்றும் சுதாரவி நாவல்ஸ் இணைந்து நடத்திய குறுந்தொடர் போட்டிக்கான முடிவுகளை வெளியிடுகிறோம். அதற்கு முன்பாக, போட்டியில் பங்குகொண்ட அனைவருக்கும் எங்களது வாழ்த்துகளும், நன்றிகளும். பலரும் வெவ்வேறு களங்களில் உங்கள் பங்கை அளித்திருந்தீர்கள். உங்களது முயற்சிகள் தொடர எங்களது வாழ்த்துகள். குறிப்பாக, லாக்டௌன் நேரத்தில் அனைவருமே கூடுதல் சுமைகளும் பொறுப்புகளும் நேரத்திலும், நடுவர்களான திருமதி. சாரதா கிருஷ்ணன், எழுத்தாளர் திருமதி. மல்லிகா பூபாலசிங்கம் ரவி மற்றும் திருமதி உமா மனோஜ் அவர்களும், குறித்த காலத்திற்குள் தங்களது முடிவுகளை எங்களுக்கு அனுப்பி வைத்ததற்கு எங்களது நன்றிகளை உரித்தாக்குகிறோம். போட்டிக்கான கதைகளைத் தேர்ந்தெடுக்க நடுவர்கள் சற்றுச் சிரமப்பட்டிருப்பது அவர்கள் அனுப்பிவைத்த மதிப்பெண்களிலிருந்தே தெரிந்துகொள்ள முடிந்தது. கதைக்கான களம், நடை, எழுத்துப் பிழை, என்று ஒவ்வொன்றையும் தெளிவாக கவனித்துப் பிரித்து மதிப்பெண் இட்டு பரிசுக்கான கதைகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். லாக்டௌன் காரணத்தால், போட்டியின் முடிவை சற்றுத் தாமதமாக அறிவிக்கலாமா என்று சிறு சஞ்சலம் இருந்தாலும், அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பங்கேற்பாளர்களுக்காக குறித்த நாளில் வெளியிட முடிவு செய்தோம். மூன்று பரிசுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மூன்றாம் பரிசாக இருவருக்கு பரிசளிக்க வேண்டிய நிலை. அத்துடன் சிறப்பும் பரிசும் வழங்க வேண்டிய சந்தர்ப்பம் அமைந்துவிட்டது. இவை எதிர்பாராததாக இருந்தாலும், நம் எழுத்தாளர்களின் திறமைக்கான ஊக்குவிப்பாக இதை எடுத்துக் கொள்வோம். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போட்டிக்கான முடிவுகள் இதோ... முதல் பரிசு வெற்றிவேல் - எழுத்தாளர் தீபிகா. இரண்டாம் பரிசு வஞ்சகம் தீர்ப்பேனடி - எழுத்தாளர் ஸ்ரீஷா மூன்றாம் பரிசு காகித மலரவள் - எழுத்தாளர் சாரா மோகன் & தீராக் காதல் நீயே - எழுத்தாளர் பிரியதர்ஷினி சிறப்புப் பரிசு காதல் சர்க்கஸ் - எழுத்தாளர் சுபஸ்ரீ பரிசுபெறும் எழுத்தாளர்களுக்கு எங்களது வாழ்த்துகள். லாக்டௌன் காரணத்தால் பரிசுகளை உடனே அனுப்பி வைக்க இயலாத காரணத்தால் சற்று தாமதமாகும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம். பங்கு பெற்ற அனைவரும், உங்கள் முகவரியை தொலைபேசி வாட்ஸ் அப் எண்ணுடன் amizhtham2020@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். பரிசு பெற்றவர்கள் உங்கள் புகைப்படத்தையும், உங்களைப் பற்றிய குறிப்பு ஒன்றையும் போட்டிக்க எழுதிய கதையை டாக்குமெண்டாகவும் எங்களுக்கு அனுப்பி வைக்கவும்.